மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் படாளம் ஊராட்சி புலிப்புரகோவில் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் – கற்பகம் தம்பதியின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீ விபத்துக்குள்ளன செய்தி அறிந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் அவர்கள் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு VG.குமரன் அவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் மற்றும் உதவித் தொகையை வழங்கினர்.
இந்நிகழ்வின் போது, ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.

