கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாணவி இறப்பதற்கு முன்பு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே கனியாமூர் ஊரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து கடந்த 13ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அவரின் உடலை வாங்க மறுத்தனர். மேலும், இது தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிசிடிவி காட்சி
இந்த விவகாரத்தில் கடந்த 17ம் தேதி நடைபெற்ற கலவரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனத்தை தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு பதிவான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாணவி இரவு 10:30 மணியளவில் மாடியில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. அதற்கு முன்பு இரவு 8 மணியளவில் மாணவி 3வது தளத்திற்கு பதற்றத்துடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.

