ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ மறைவுக்கு பிரதமர் மோடி ‘நெருங்கிய நண்பரை இழந்து வாடுகிறேன்’ என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஷின்சோ மறைவு
ஜப்பான் நாட்டின் உள்ள நாரா நகரில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மார்பில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஷின்சோ உயிரிழந்தார்.
மோடி இரங்கல்
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஷின்சோ அபே மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், ‘என்னுடைய நெருங்கிய நண்பர் ஷின்சோ அபேவின் திடீர் மறைவு என்னை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலம் முதலே ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே என்னோடு நல்ல நட்போடு பழகி வந்தார். அவரின் மறைவுக்கு இந்தியாவில் நாளை ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

