நெல்லை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.
விபத்து
நெல்லை, பணகுடியை அடுத்த முத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (55). இவரது மகள் ஜான்சி (24). ஜான்சிக்கு திருமணமாகி 2 வயது பெண் குழந்தை ஒன்றுள்ளது. ஜான்சி வள்ளியூரில் உள்ள தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை அவர் வேலைக்கு புறப்பட்டு அவரது தந்தை ஐயப்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பணகுடி முத்துசாமிபுரத்தில் வேகக்கட்டுப்பாட்டை கடந்து சென்ற போது அவ்வழியாக வள்ளியூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கார் ஓன்று அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜான்சி சம்பவ இடத்திலும், ஐயப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பணகுடி காவல்நிலைய போலீசார் வள்ளியூரை சேர்ந்த கார் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

