தமிழகத்தில் தொடர் மழையால் பொதுமக்களுக்கு அதிமுகவினர் உதவ வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பழனிசாமி வேண்டுகோள்
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறுகையில், ‘கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடந்த நாட்களில் பெய்த மழையினால் விவசாய நிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மதுரையில் கனமழை காரணமாக, முக்கிய நகரங்களான ஆண்டாள்புரம், ஜெய்ஹிந்புரம், மேலபெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தமிழகத்தில் தொடர் கனமழை வெள்ளத்தால் பாதித்த பொது மக்களுக்கு, அதிமுக நிர்வாகிகள் உடனடியாக உதவ வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

