தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த கோரி அன்புமணி ராமதாஸ் 3 நாள் நடைபயணம் தொடங்கினர்.
நடைப்பயணம்
தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக காவிரி உபரி நீர் திட்டம் உள்ளது. அனல் அரசு இத்திட்டத்தை செயல்படுத்த தாமதித்து வருகின்றது. இந்நிலையில், தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாள் நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். தருமபுரி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று முதல் 3 நாள் பிரச்சார பயணம் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். நடைப்பயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

