Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு; 250க்கும் மேற்பட்டோர் காயம்

ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு; 250க்கும் மேற்பட்டோர் காயம்

March 17, 20262 Mins Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலுள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் (காபூல் நேரப்படி) ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 250-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொடூர சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தானின் செய்தி தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “காபூலில் உள்ள மருத்துவமனையின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 2000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்திருக்கிறது. இந்த தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பா?!.. கண்காணிக்கும் அமெரிக்கா!

இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியாளர்களும் மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயை கட்டுப்படுத்தவும், இறந்தவர்களின் உடல்களை மீட்கவும் அவசரகால குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காபூலில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் விபத்து குறித்த காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளன.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரு தரப்பினரும் தங்கள் எல்லைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் ஆப்கானை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், பாகிஸ்தான் கொடூரங்களை அரங்கேற்ற மருத்துவமனைகளையும், பொதுமக்கள் வசிக்கிற இடங்களையும் குறி வைப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் அப்பாவி பொதுமக்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செயலை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  மோடி மிகச்சிறந்த பிரதமர், அவருடனான தனது நட்பு எப்போது தொடரும் - டிரம்ப்

இந்நிலையில், காபூலில் எந்த மருத்துவமனை மீதும் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் ராணுவ தளங்களை மட்டுமே தாங்கள் குறி வைத்து வான்வெளி தாக்குதலை நடத்தியதாகவும், பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறி வைக்கவில்லை என்று கூறியுள்ள பாகிஸ்தான், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்திருக்கிறது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியது. இதனால் பிப்ரவரி மாத இறுதியில் இரு நாடுகளிடையே மீண்டும் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களே கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘வரும் தேர்தலில் மக்கள் பலமே ஜெயிக்கும்; பண பலம் அல்ல’ – நயினார் நாகேந்திரன் உறுதி
Next Article ஆர்எஸ்எஸ், ரா உளவு அமைப்பை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும்: அமெரிக்க அமைப்பு பரிந்துரை

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.