Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»பலுசிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை | பாக். ராணுவம் – தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்

பலுசிஸ்தானில் 200க்கும் மேற்பட்டோர் படுகொலை | பாக். ராணுவம் – தீவிரவாதிகள் இடையே தொடரும் மோதல்

February 2, 20262 Mins Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படைகளுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் இருதரப்பிலும் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது, பலுசிஸ்தான் பலூச் மன்னரின் கீழ் தனி நாடாக இருந்து வந்தது. அதன் பின்னர், பாகிஸ்தான் அதனை தன்னோடு இணைத்துக்கொண்டது. அது முதல், அங்கு அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் எனும் அமைப்பு, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக கடந்த சில நாட்களாக சண்டையிட்டு வருகிறது. பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பலுசிஸ்தானின் பல மாவட்டங்களில் 40 மணி நேரத்துக்கும் மேலாக தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 17 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

கரான், மஸ்துங், தும்ப், பாஸ்னி உள்ளிட்ட பகுதிகளில் நாங்கள் நடவடிக்கைகளை முடித்துவிட்டோம். அவை எங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டன. தலைநகர் குவெட்டா மற்றும் நோஷ்கியின் சில பகுதிகளிலும் எங்கள் போராளிகள் உள்ளனர். அங்கு பாகிஸ்தானின் ராணுவம் விரட்டியடிக்கப்பட்டுவிட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  தனது மகளுடன் ரகசிய உறவில் இருக்கும் எலான் மஸ்க் தந்தை !

இந்த தாக்குதல் குறித்து விவரித்துள்ள பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்பராஸ் புக்தி, ‘‘பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த போராளிகள் வங்கிகள், சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், 31 பொதுமக்களும் 17 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர்களில் 145 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான அனைத்து மாவட்டங்களும் மீட்கப்பட்டுள்ளன. நாங்கள் அவர்களை துரத்துகிறோம். அவர்களை அவ்வளவு எளிதில் தப்பிக்க விடமாட்டோம். எங்கள் ரத்தம் அவ்வளவு மலிவானது அல்ல’’ என தெரிவித்துள்ளார்.

இந்த மோதல் காரணமாக பலுசிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் பாதுகாப்பாக திரும்புவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளதாக 39வயது கடைக்காரர் ஹம்துல்லா தெரிவித்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், எப்போதும் பரபரப்பாக இருக்கும் குவெட்டா நகரத்தில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதாகவும், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், மக்கள் அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க :  தங்கத்தில் செய்யப்பட்ட புதிய மோட்டார் சைக்கிள்

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக குவெட்டா சென்ற பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என குற்றம் சாட்டினார். எனினும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை. இதே கருத்தை, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை, ‘‘பாகிஸ்தான் முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இது, தனது சொந்த தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் வழக்கமான தந்திரங்கள் அன்றி வேறில்லை.

வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் ஒவ்வொரு முறையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் திரும்ப திரும்ப கூறி வருகிறது. இதற்குப் பதிலாக, அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதில் அது கவனம் செலுத்துவது சிறந்ததாக இருக்கும். அதன் அடக்குமுறை, கொடூரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் நன்கு அறியப்பட்டதே’’ என தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை – பெங்களூரு இனி 1.13 மணிநேரத்தில் செல்லலாம்… ரயில்வேயின் புதிய திட்டம் – பட்ஜெட்டில் தகவல்
Next Article மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்?

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.