சென்னை மதுரவாயல் – துறைமுகம் இடையே ரூ.5800 கோடி செலவில் பறக்கும் மேம்பாலச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் மேம்பாலம்
சிவானந்தா சாலை முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு அதில் கீழ் அடுக்கில் உள்ளுர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகம் செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக சென்னைத் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் கூறியுள்ளார்.
ட்விட்டர் பதிவு
மேலும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான பறக்கும் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கான இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 2024-ம் இறுதிக்குள் நிறைவடையும் குறிப்பிட்டுள்ளார்.
Strengthening #GatiShakti for the vision of #AatmanirbharBharat!
Working towards providing seamless multimodal connectivity in #NewIndia, the project for Chennai Port to Maduravoyal corridor in Tamil Nadu has been developed at an estimated cost of Rs. 5800 Cr. #PragatiKaHighway pic.twitter.com/byvGUf1GAy
— Nitin Gadkari (@nitin_gadkari) October 3, 2022

