தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமான பணி நீதிமன்ற உத்தரவின் பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்காசி ஆட்சியர்
கடந்த 2019ம் ஆண்டு தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அந்தவகையில் தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற வந்தது. சுற்றுசூழல்துறையிடம் அனுமதி பெரும் வரை பணிகள் எதுவும் நடைபெறாமல் இருக்க இடைக்கால தடை விதித்து மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களில் உரிய அனுமதி பெற்றபின் தென்காசி ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

