நாங்குநேரி டோல்கேட் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்து இது தொடர்பாக 4 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் பறிமுதல்
நாங்குநேரி, டோல்கேட் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வந்த கார் ஒன்றை சோதனையிட்டனர். அந்த காரில் புதுக்கோட்டையை சேர்ந்த அலாவுதீன்(39) உட்பட 4 பேர் இருந்தனர். வாகனத்தில் இருந்து வந்தவர்கள் துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தி வந்த ஒருகிலோ தங்கம் கடத்தி வந்தது. அலாவுதீன், தனது ஆசன வாய் பகுதியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். மேலும், அவரிடம் இருந்து பாஸ்போர்ட் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளிடம் 4 பேரையும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

