இந்தியாவுடன் வங்க தேசத்தையும், பாகிஸ்தானையும் இணைப்பது சாத்தியம் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியுள்ளார்.
இணைப்பது உறுதி
ஹரியானா மாநிலம், குருகிராமில் பாஜகவின் தேசிய சிறுபான்மை யுவ மோர்ச்சாவின் (Bharatiya Janata Yuva Morcha) மூன்று நாள்கள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. அதில் ஹரியானா மாநிலத்தின் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமைதாங்கி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘1991ல் மக்கள் பெர்லின் சுவரை உடைத்து கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் இணைத்தது சாத்தியமானது. அதைப்போல, பாகிஸ்தானையும்\, வங்காள தேசத்தையும் இந்தியாவுடன் இணைப்பதும் சாத்தியமாகும். கடந்த 1947ம் ஆண்டு நம் மண்ணில் நடந்த பிரிவினை வேதனைக்குரியது. மேலும், அந்தப் பிரிவினை மத அடிப்படையில் செய்யப்பட்டது. சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பயத்தையும், பாதுகாப்பின்மை உணர்வைவும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு சிறுபான்மையினர் என்ற குறிச்சொல் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்யின் பயத்தைக் காட்டி சிறுபான்மையினரிடையே பாதுகாப்பற்ற உணர்வை பெரும் பழமை மாறாத கட்சியான காங்கிரஸ் உருவாக்கியிருக்கிறது. ஆனால் மக்கள் இப்போது காங்கிரஸின் சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் சிறுபான்மையினரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தியது’ எனக் கூறினார்.

