சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது தகுதியற்ற ஒரு இளம் படைப்பாளிக்கு வழங்கப்பட்டுள்ளது என எழுத்தாளர் ஜெயமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன்
இது குறித்து தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையத்தில் பதிவு செய்துள்ளார். யுவபுரஸ்காருக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்த அரிசங்கர், றாம் சந்தோஷ் , சுரேஷ் பிரதீப், வேல்முருகன் இளங்கோ, கார்த்திக் புகழேந்தி மட்டுமே இலக்கியத் தகுதிக் கொண்டவர்கள் என்றும் விருது அறிவிக்கப்பட்டுள்ள காளிமுத்து இனிதான் கவிதைகளே எழுதத்தொடங்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விருதுத்தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள நடுவர்களுக்குப் பயணப்படி, கெளரவ ஊதியம் தவிர சாகித்ய அகாடமியின் தகுதி குறித்து அவர்களுக்கு அக்கறையேதும் இருக்க நியாயமில்லை என அவர் காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். ஜெயமோகனின் கருத்து இலக்கிய உலகில் விவாதங்களை எழுப்பியுள்ளது. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்கு சில படைப்பாளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

