புதிய அப்டேட்
மாநாடு’, ‘மன்மத லீலை’ படங்களை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு, நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். என்சி22 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.
இந்நிலையில், என்சி22 திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
With all ur love and blessings beginning my next #VP11 tomorrow with @chay_akkineni #NC22 @SS_Screens YES the shoot begins tomorrow @ilaiyaraaja @thisisysr pic.twitter.com/0ugXmSgDRD
— venkat prabhu (@vp_offl) September 20, 2022

