சபரிமலை தரிசனம்
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ இதில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . இதனைத்தொடர்ந்து படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜெயம் ரவி நடிகர் ஜெயராம் இருவரும் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதனை நடிகர் ஜெயம்ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !! #PonniyinSelvan #SwamiyeSaranamAyappa pic.twitter.com/MS5XtF6VeR
— Arunmozhi Varman (@actor_jayamravi) September 23, 2022

