2022- கான ஐபிஎல் தொடர் நாளை(மார்ச் 26) மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியும் கேகேஆர் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்பார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடக்கிய முதல் சீசனிலிருந்து (2008) கடந்த ஆண்டுவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடரின் முடிவில் தெரிவித்தார். இதனால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? தோனியின் கேப்டன்ஷிப்பை நிரப்ப போவது யார்? என்ற கேள்விகள் வெளியாகி வந்தன. அனைவருக்கும் விடைதரும் விதமாக ஜடேஜா தான் சிஎஸ்கே அடுத்த கேப்டன் என்ற செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தியை ரசிகர்கள் மத்தியில் உளவ விட்டுள்ளார்.
‘புதிதாக இவ்வருட ஐபிஎல் தொடரில் களம் காணவிருக்கும் குஜராத் அணி ஜடேஜாவுக்கு சொந்த ஊர் என்பதால் ஜடேஜா குஜராத் அணிக்கு விளையாட விருப்பம் காட்டிவந்தார். ஆனால் தோனிதான் ஜடேஜாவை சிஎஸ்கே அணியிலேயே தக்க வைப்பதற்கான விலையை 16 கோடியாகா உயர்த்தினார். மேலும் சிஎஸ்கே அணியில் விளையாட ஜடேஜாவை சமாதானம் செய்தார். ஜடேஜாவின் மேலுள்ள நம்பிக்கையில் இப்போது கேப்டன் பதவியும் வழங்கியுள்ளார் ‘ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

