ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று லீக் சுற்று முடிந்துள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சகிப்சதா பர்கான் 58 ரன்களும், சைம் அயுப், முகமது நவாஸ் தலா 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிவம் துபே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் சுப்மன் கில் – அபிசேக் சர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். 39 பந்துகளை எதிர்கொண்ட அபிசேக் சர்மா 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 7 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வெற்றியை உறுதி செய்தனர். 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா 30 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 7 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார்கள்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

