கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்டிஏ கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் அதிமுக ஆதரவாளர்களுடன், ஊர்வலமாக வருகை வந்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சத்திய பாலகங்காதரனிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக சார்பில் தியாகராஜன் போட்டியிடுகின்றனர். கரூரில் பலமுறை வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இம்முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் மாவட்ட வேட்புமனு நிலவரம்:
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் இன்று 9 நபர்கள் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் விவரம்:
1. ஜெ.மாதவன்
2. பொ.செல்வகுமார்
3. த.சரவணன்
4. பா.காஜா மொய்தீன்
5. சீ.செந்தில்குமார்
6. பா.சம்பத்குமார்
7. ச.இம்ரான் கான்
8. கா.வீரமலை
9. த.முருகானந்தம்
கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் 3 மூன்று வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களது விவரம்:
1. மு.ராஜகுரு
2. வை.சத்யா
3. சு.கீதா
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் விவரம்
1. நரேன்
2. சக்திவேல்
கரூர் தொகுதியில் இன்று மட்டும் 14 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

