இந்தி திரையுலகின் பெரிய பாலிவுட் திருமணம் இந்த வாரம் நடைபெற உள்ளது. ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் திருமண விழா கொண்டாட்டடங்கள் புதன்கிழமை முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 14 அன்று திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்த நட்சத்திர ஜோடிகள் பல ஆண்டுகளாக தங்கள் உறவைப் பற்றி பொதுவெளியில் பேசி வருகிறார்கள். இருப்பினும் அவர்களின் திருமண ஏற்பாடுகள் அமைதியாக இருக்கின்றன. திங்கள்கிழமை, திருமண அரங்குகளான ஆர்.கே.ஸ்டுடியோஸ் மற்றும் கிருஷ்ணராஜ் பங்களா விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆடைகளும் வழங்கப்பட்டன.
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் திருமணம் மெஹந்தி விழாவுடன் தொடங்கி, ஏப்ரல் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சில செய்திகள் ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் என்றும், அலியா பட்டின் மாமா ராபின் பட் ஏப்ரல் 15 என்றும் கூறியதாக தெரிவிக்கின்றன.

ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் தங்கள் நண்பர்களுக்காக ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தாஜ் கொலாபாவில் இரண்டு பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். விருந்தினர் பட்டியல் பிரபல நட்சத்திரங்கள் நிறைந்ததாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

