உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான பெலுகா எக்ஸ்.எல் முதல்முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
ராட்சத சரக்கு விமானம்
ஏர்பஸ் நிறுவனம் 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்திய சரக்கு விமானம் பெலுகா எக்ஸ்.எல். ஆர்க்டிக் பெருங்கடலில் இருக்கும் பாலூட்டி வகையைச் சேர்ந்த வெள்ளை நிறத்திலான பெலுகா திமிங்கலத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டதால் இந்த ராட்சத சரக்கு விமானம் பெலுகா எக்ஸ்.எல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விமானம் 52 டன் வரை சரக்குகளை ஏற்றக் கூடியது.
சென்னை விமான நிலையம்
இந்த ராட்சத சரக்கு விமானம் விண்வெளி, ராணுவ போக்குவரத்துக்குத் தேவையான தளவாடங்களைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. மணிக்கு சுமார் 864 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதை பார்த்து பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் அசந்து போனார்கள்.

