கோவை மாவட்டம், வால்பாறையில் நடந்த இன்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,” ஐசியுவில் வென்டிலேட்டர் உதவியுடன் நோயாளி சிகிச்சையில் இருப்பது போல், திமுக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக ஒரே அணியாக இருக்கிறது” என்றார்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது:- அஇஅதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது; அஇஅதிமுகவின் ஒற்றுமையை 2026 சட்டமன்ற தேர்தலில் நிரூபிப்போம்.
அஇஅதிமுக கூட்டணி மக்களை நம்பி இருக்கிறது; யார் ஆள வேண்டுமென மக்களே முடிவு செய்கிறார்கள். தொண்டர்களின் செல்வாக்கு திமுகவில் குறைந்துவிட்டதால், ஒவ்வொரு வீடாக சென்று கெஞ்சி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வரும் அவல நிலை திமுகுவுக்குத்தான் இருக்கிறது.
அதனால், திமுகதான் ஐசியுவில் இருக்கிறது. அஇஅதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு. இவ்வாறு அவர் கூறினார்.
