“உங்களை ஏன் நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள்?” என என் மனைவி என்னிடம் கேட்பார். அந்த 4 வருட காலத்தில் நான் என்னை பற்றி உயர்ந்த எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. பார்ட்டிகளில் கூட நான் ஒதுங்கி யாருக்கும் தெரியாமல் இருப்பேன். யாருக்கும் என்னை பிடிக்கவில்லை என்றே எனக்கு தோன்றும். அதேபோல தான் எனக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தனர்.” என சூப்பர் ஸ்டார் நடிகரின் மகன் தெரிவித்துள்ளார்.
சினிமா ‘வாரிசு’ என சொல்லப்பட்டாலும், அவர் சூப்பர் ஸ்டார் நடிகரின் மகனாகவே இருந்தாலும், திறமையும், சரியான சூழலும் அமையாவிட்டால் சினிமாவில் சாதிப்பது கடினம் என்பதை உணர்த்தும் பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில், ‘கங்குவா’ பட வில்லன் நடிகர் பாபி தியோலும் ஓர் உதாரணம்.
சினிமா ‘வாரிசு’ என சொல்லப்பட்டாலும், அவர் சூப்பர் ஸ்டார் நடிகரின் மகனாகவே இருந்தாலும், திறமையும், சரியான சூழலும் அமையாவிட்டால் சினிமாவில் சாதிப்பது கடினம் என்பதை உணர்த்தும் பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில், ‘கங்குவா’ பட வில்லன் நடிகர் பாபி தியோலும் ஓர் உதாரணம்.
மறைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவின் மகன் பாபி தியோல். கடந்த 1995-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘பர்சாத்’ இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சூப்பர் ஸ்டார் தந்தையின் மகன் என்ற ஐடி கார்ட் உடன் சினிமாவில் நுழைந்தாலும், காலப்போக்கில் தனது நடிப்பால் கவனம் பெற்றார் பாபி தியோல்.
மறைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவின் மகன் பாபி தியோல். கடந்த 1995-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘பர்சாத்’ இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். சூப்பர் ஸ்டார் தந்தையின் மகன் என்ற ஐடி கார்ட் உடன் சினிமாவில் நுழைந்தாலும், காலப்போக்கில் தனது நடிப்பால் கவனம் பெற்றார் பாபி தியோல்.
இவர் நடிகர் சன்னி தியோலின் சகோதரர். பாபி தியோலின் முதல் படமான ‘பர்சாத்’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘குப்த்’, ‘சோல்ஜர்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென தனி அடையாளத்தை பெற்றார். ஆண்டுக்கு 3 படங்கள் என நடித்து வந்தவருக்கு 4 ஆண்டுகள் பட வாய்ப்பே கிடைக்கவில்லை.
இவர் நடிகர் சன்னி தியோலின் சகோதரர். பாபி தியோலின் முதல் படமான ‘பர்சாத்’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘குப்த்’, ‘சோல்ஜர்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென தனி அடையாளத்தை பெற்றார். ஆண்டுக்கு 3 படங்கள் என நடித்து வந்தவருக்கு 4 ஆண்டுகள் பட வாய்ப்பே கிடைக்கவில்லை.
2013 முதல் 2017 வரை எந்தப் படமும் நடிக்காமல் சும்மாவே இருந்தார் பாபி தியோல். தன்னுடைய வாழ்க்கையின் இருண்ட காலம் என அதை குறிப்பிடுகிறார் பாபி. சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவின் மகனாகவும், சன்னி தியோலின் சகோதரராகவும் இருந்தபோதிலும், பாபி பல ஆண்டுகளாக பட வாய்ப்பில்லாமல் தவித்தார்.
2013 முதல் 2017 வரை எந்தப் படமும் நடிக்காமல் சும்மாவே இருந்தார் பாபி தியோல். தன்னுடைய வாழ்க்கையின் இருண்ட காலம் என அதை குறிப்பிடுகிறார் பாபி. சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவின் மகனாகவும், சன்னி தியோலின் சகோதரராகவும் இருந்தபோதிலும், பாபி பல ஆண்டுகளாக பட வாய்ப்பில்லாமல் தவித்தார்.
பல நேர்காணல்களில் இது தொடர்பாக பாபி தியோல் பேசியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் தன்னை குறைத்து மதிப்பிட்டதாகவும், மன உளைச்சலில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 2018-ல் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘ரேஸ் 3’ படத்தில் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாபி தியோல் கம்பேக் கவனம் பெற்றது.
பல நேர்காணல்களில் இது தொடர்பாக பாபி தியோல் பேசியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் தன்னை குறைத்து மதிப்பிட்டதாகவும், மன உளைச்சலில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 2018-ல் சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘ரேஸ் 3’ படத்தில் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாபி தியோல் கம்பேக் கவனம் பெற்றது.
“கிளாஸ் ஆஃப் ’83” மற்றும் “லவ் ஹாஸ்டல்” போன்ற படங்கள் பாபி தியோலுக்கான பட வாய்ப்புகள் பிரகாசிக்க தொடங்கின. இதன் பிறகு தான் சம்பவமே. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான ‘அனிமல்’ படத்தில் அப்ரார் ஹக் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் பாபி தியோல். இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
“கிளாஸ் ஆஃப் ’83” மற்றும் “லவ் ஹாஸ்டல்” போன்ற படங்கள் பாபி தியோலுக்கான பட வாய்ப்புகள் பிரகாசிக்க தொடங்கின. இதன் பிறகு தான் சம்பவமே. சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான ‘அனிமல்’ படத்தில் அப்ரார் ஹக் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் பாபி தியோல். இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தனது 54-வது வயதில் ‘அனிமல்’ படம் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார். பாலிவுட்டின் மிரட்டலான வில்லனாக முத்திரை பதித்தார் பாபி தியோல். இந்தப் படம் அவருக்கு இந்தி உலகை தாண்டி இந்திய அளவில் கவனம் பெற வைத்தது. அடுத்து சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார். தற்போது விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது 54-வது வயதில் ‘அனிமல்’ படம் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார்.
பாலிவுட்டின் மிரட்டலான வில்லனாக முத்திரை பதித்தார் பாபி தியோல். இந்தப் படம் அவருக்கு இந்தி உலகை தாண்டி இந்திய அளவில் கவனம் பெற வைத்தது. அடுத்து சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார். தற்போது விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

