சென்னையில் உள்ள ‘காக்கும் கரங்கள்’ முதியோர் இல்லத்தில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்தேன்.

சென்னையில் தூய்மை பணியாளர்களுடன் காலை உணவு அருந்தி அவர்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்தேன்.

பட்னம்பாக்கம் கடற்பகுதியில் உள்ள வங்கக்கடல் நாயகி அருள்மிகு ஸ்ரீ துலுக்காணத்தம்மன் ஆலயத்தில் அம்மனை வணங்கி, நமோ கல்வி & தொண்டு அறக்கட்டளை மற்றும் முள்ளிக்குப்பம் மீனவர்கள் பஞ்சாயத்து சபை பொதுமக்கள் சார்பில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துடுப்புப் படகுப் போட்டி, காவல்துறையின் அடக்குமுறையாலும், இந்நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களுக்கு காவல்துறை விடுத்த மிரட்டலாலும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. எனினும், போட்டியில் பங்கேற்கவிருந்த அனைத்து வீரர்களுக்கும் நினைவுப் பரிசும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
தென் சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முப்பெரும் விழாவான மாபெரும் ரத்ததான முகாம்,

மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கிரி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

இன்றைய தினம், சென்னை கேசவப் பெருமாள் கோவிலில் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் இணைந்து நடத்திய திருக்குடை உபய உற்சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டு பகவான் பெருமாளை தரிசனம் செய்தேன்.

இன்றைய தினம், சென்னை ராயபுரம் R.S.R.M மருத்துவமனையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவித்தேன்.

இன்றைய தினத்தில் இதுவரை பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று 13 குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு பாஜக வழக்கறிஞர்கள் அணி மாநிலத் தலைவர் திரு. குமரகுரு அவர்களது தலைமையில், நடைபெற்ற, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்தட்ட உதவிகள் வழங்கினேன்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் திரு. கருநகராஜன் அவர்களும், பாஜக மாநில செயலாளர் திரு. வினோஜ் பி. செல்வம், மாநில இளைஞரணித் தலைவர் திரு. S.G.சூர்யா அவர்களும், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. நாகராஜன் அவர்களும் உடன் இருந்தனர்.

