திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 24- ந் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் காவல் துறை, திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமை தாங்கி பக்தர்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, வாகன நிறுத்தம், கூட்ட நெரிசல் மேலாண்மை போன்ற அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கினார்.
மேலும் பிரம்மோற்சவ காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து திட்டங்கள் வகுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

