தமிழகத்தில் 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் உட்பட சுமார் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் கூறியுள்ளது.
ஆர்டிஐ தகவல்
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் அரசு பள்ளிகள் மூடப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இயங்கும் 669 தொடக்கப்பள்ளிகளிலும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
மாவட்டங்கள்
திருவாரூரில்-2, நாட்றம்பள்ளியில்-1, தேவக்கோட்டையில்-4, திருவள்ளூரில்-1, தாராபுரத்தில்-1, புள்ளம்பாடியில் -1, மயிலாடுதுறையில்-1, ஆரணியில்-1, திண்டுக்கலில்-4, லால்குடியில்-2, தர்மபுரியில்-1, திருவண்ணாமலையில் -1, திருப்பூரில்-5, வேலூரில்-2, நீலகிரியில்-5, தேனியில்-5 என்று சுமார் 40 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.

