தனது பிறந்த நாளை ஒட்டி கே.என்.நேரு ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 44 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
அதாவது நவம்பர் 9ம் தேதி பிறந்த நாளன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் முன்கூட்டியே 44 லட்ச ரூபாயை அளித்திருந்தார்.
திருமலையில் ஒருநாள் அன்னதானம் வழங்குவதற்கு 44 லட்ச ரூபாய் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவித்ததின் பேரில், அதற்குரிய தொகை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு சார்பில் சுரேஷ் என்பவர் திருமலைக்கு சென்று தேவஸ்தான முகாம் அலுவலகத்தில் அதன் தலைவர் பி.ஆர்.நாயுடுவை சந்தித்து கடந்த செப்டம்பர் 13 சனிக்கிழமை அன்று காசோலையை வழங்கினார்.
இதையடுத்து அந்த தொகை நேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க பயன்படுத்தி கொள்ளப்பட்டது.
திமுக அமைச்சர் கே.என்.நேரு அளித்த நன்கொடை தொடர்பாக திருமலையில் உள்ள டிஜிட்டல் போர்டு ஒன்றில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு கவனம் பெற்றிருக்கிறது.
அதில், Donor For the Day என்று தலைப்பிட்டு தேதி மற்றும் நன்கொடை செலுத்தப்பட்ட பணம் ஆகிய விவரங்கள் உடன் ஸ்ரீ கே.என்.நேரு என அமைச்சரின் பெயரும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.
திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கான விடுதியில் அந்த டிஜிட்டல் போர்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

