Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»நாங்குநேரி இரட்டை கொலை: மேலும் இருவர் கைது

நாங்குநேரி இரட்டை கொலை: மேலும் இருவர் கைது

March 7, 20262 Mins Read65 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில், சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முகமூடி அணிந்தபடி வந்த 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் தென்பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி சாய்த்தனர். மேலும், பெரும்பத்து பகுதியில் கணேசன் என்பவர் நடத்தி வரும் டீக்கடையில் புகுந்து, அங்கு டீ குடித்த நபர்களையும் அந்த கும்பல் கொடூரமாகத் தாக்கியது.

அதில் மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளி டிரானத் கட்டா ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜான், டிரானத் கட்டா குடும்பத்தினரையும், மருத்துவமனையில் உள்ள நபர்களையும் அரசியல் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க :  ஹெச்.ராஜாவை சந்தித்து நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய இச்சம்பவத்தின் பின்னணியில் சாதி ரீதியான பகை இருப்பதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேசமயம் மது மற்றும் கஞ்சா போதையில் தான் இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, வன்முறை மற்றும் தீண்டாமை அதிகமாக நடைபெற்று வரும் நெல்லை மாநகரில் நடந்த இந்த இரட்டைக் கொலை சம்பவமும், சாதி ரீதியான தாக்குதலாக இருக்கும் என்ற கோணத்தில் மாவட்ட போலீசார் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பக்கூடாது, பிரச்சனைக்குரிய கருத்துகளை பகிர்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பதற்றம் நிலவி வருவதால் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களை கண்காணித்து வரும் போலீசார், வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வகையில், சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து இன்று வரை வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்ட ஆறுமுகம் (63) மற்றும் முத்துக்குமார் (27) இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க :  கரூர் துயர சம்பவம் விபத்து அல்ல - எடப்பாடி பழனிசாமி

அதேபோல, நாங்குநேரி சம்பவத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்டதாக விஜயநாராயணம், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, மூன்றடைப்பு, மானூர், திருக்குறுங்குடி ஆகிய 6 காவல் நிலையங்களில் என மொத்தம் 11 வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வார்னிங் கொடுத்தும், அதனை மீறி வீடியோ பதிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, நாங்குநேரி கொலை சம்பவத்தில் 9 பேர் கொண்ட கும்பலில் கண்ணன், அந்தோணி மைக்கேல், ராஜா, வசந்தகுமார், உச்சிமாகாளி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இருவரின் பெயர் விபரங்களை காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிஜய் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்: சீமான் ஆதங்கம்
Next Article பச்சிளம் நாய்க்குட்டிகளை சுவற்றில் வீசி கொடூரமாக கொன்ற பெண்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.