இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது.
இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.
இதனையடுத்து அரையிறுதி சுற்று 29ம் தேதி தொடங்க உள்ளது.
இதில் 29ந்தேதி கவுகாத்தியில் நடக்கும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்த இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
30-ந்தேதி நவிமும்பையில் நடக்கும் 2வது அரையிறுதியில் புள்ளி பட்டியலில் 1 மற்றும் 4-வது இடங்களை பிடித்த இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் நவம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மோதும்.

