கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை மார்கெட் அருகே முகமது நஸ்ருதினை தெருநாய் ஒன்று கடித்துள்ளது.
இதனையடுத்து அவர் உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ரேபிஸ் தொற்று அவரை தாக்கியிருப்பது உறுதியானதை அடுத்து தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி முகமது நஸ்ருதின் பரிதாபமகாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

