ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது.
இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனையானது.
இதனை தொடர்ந்து புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 720 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கு விற்பனையானது.
நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 159 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆறாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

