தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மோன்தா புயலாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ள மோன்தா தீவிரப்புயல் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
மச்சிலிப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 190 கி.மீ. காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 340 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே மச்சிலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே மாலை அல்லது இரவு மோன்தா புயல் கரையை கடக்க உள்ளது.
மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90-110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

