மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் நகரம் 22- வது வார்டு பழைய மாம்பாக்கம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய மாம்பாக்கம் பகுதியில் சிறுவர் பூங்கா அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.Ex.MP அஇஅதிமுக கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 15 இலட்சம் நிதி ஒதுக்கி பழைய மாம்பாக்கம் பகுதியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணி நடைபெற்று அதற்கான திறப்பு விழா 12/10/2025 இன்று 22-வது வார்டு கழக செயலாளர் திரு சங்கர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிற்றப்பு விருந்தினர்களாக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மதுராந்தகம் நகர கழக செயலாளர் திரு KC.சரவணன்ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கி குழந்தைகள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தனர்.
அதனை தொடர்ந்து இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் சொந்த செலவில் அப்பகுதி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் பின்பு பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில். நகர மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள், நகர கிளைக் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

