Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»“காங்கிரஸை திமுகவே தோற்கடித்து விடும்” – அன்புமணி ஆருடம்

“காங்கிரஸை திமுகவே தோற்கடித்து விடும்” – அன்புமணி ஆருடம்

February 17, 20262 Mins Read22 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

“வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸை திமுக-வே தோற்கடித்து விடும்” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

பாமக மாணவர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை அடுத்த பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாணவர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி ரதன், தலைவர் விஜயராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை, கஞ்சா, சாராயம் தான் புழக்கத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சாராய ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கடன் இருக்கும் போது, ஓட்டுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் கொடுப்பதற்காக மேலும் ரூ.6 ஆயிரம் கோடி எதற்காக கடன் பெற வேண்டும்?

அங்கன்வாடி ஊழியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க அரசிடம் நிதி இல்லை. ஓட்டுக்காக பணம் கொடுக்க ரூ.6 ஆயிரம் கோடி கடன் எப்படி பெற முடிந்தது? ரூ.5 ஆயிரம் கோடி கல்வி கடனை ரத்து செய்ய கடன் பெறாதது ஏன்? தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோசமான ஆட்சியை தூக்கி எறிய தமிழக மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர்.

இதையும் படிக்க :  செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கிய திமுக-வின் உருட்டுக்கடை அல்வா

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. திமுக கூட்டணியை அவர்களே முடித்து விடுவார்கள். காங்கிரஸை திமுக-வே தோற்கடித்துவிடும். பொறுத்திருந்து பாருங்கள். மொழிப் போரைத் தொடங்கியது மாணவர்கள் தான். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டியது திமுக. 1967-ல் இதை பயன்படுத்திக் கொண்டு தான் ஆட்சிக்கு வந்தார்கள். அன்று முதல் தற்போது வரை திமுக என்ன செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்தி, பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க உறுதியேற்போம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறாமல் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் தற்கொலைக்கு காரணம், ஒரு லட்சம் வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நியமிக்காமல், மாணவர்களின் கல்வி, அறிவு வளர்ச்சியை சீரழித்தது, படித்த இளைஞர்களின் அரசு வேலை, தனியார் வேலை குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்றவற்றுக்காக திமுக அரசுக்குக் கண்டனம்.

இதையும் படிக்க :  அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு தடைவிதிக்க நடவடிக்கை!

சிறப்பு டெட் தேர்வுகளை நடத்தாமல், 4 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய திமுக அரசின் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். திமுக ஆட்சியின் மீதான ரூ. 6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் அமைக்கவும், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததற்கு தமிழக மக்களிடம் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.27-ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு
Next Article “காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் ரவுடியைப் போன்றவர்” – மணிசங்கர் அய்யர் கடும் தாக்கு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.