சென்னை ஆவடி போன்ற புறநகர் பகுதிகளுக்கு விரைவில் மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளதால் 3 மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை புறநகர் பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை விரைவில் வரவுள்ளது.
22 கி.மீ தூர மெட்ரோ ரயில் பாதை, மேம்பாலங்கள், ஆவடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் ஆகியவை பயணத்தை எளிதாக்கும். 2030க்குள் கோயம்பேடிருந்து பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும்.
இது ஆவடி மற்றும் பட்டாபிராம் போன்ற பகுதிகளுக்கு சென்று வர வசதியாக இருக்கும். இந்த திட்டத்துடன் சென்னை – திருத்தணி நெடுஞ்சாலை விரிவாக்கமும் நடைபெற உள்ளது.
CMRL இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்த திட்டம் மேற்கு புறநகர் மக்களின் பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

