தமிழகத்தில் நெடுஞ்சாலை துறை சேர்வதற்கான 181 அலுவலருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணிநியமன ஆணை
நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் மூலமாக தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் சார்நிலைப்பணிகள் தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிலையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

