இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி, சிறை சென்ற தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளையொட்டி, இன்று பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன்.
அப்போது மாநில பொதுச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.பொன் பாலகணபதி அவர்களும், மாநில பொதுச் செயலாளர் மற்றும் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு.கருப்பு முருகானந்தம்
அவர்களும், திருச்சி மற்றும் கன்னியாகுமரி பெருங்கோட்டத்தை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பாஜக காரியகர்த்தாக்களும் உடன் இருந்தனர்.

