சென்னை: திமுக கவுன்சிலர் புருஷோத்தமனின் ரவுடித்தனத்தை வீடியோவாக வெளியிட்டு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் திருவாரூர்கட்டபொம்மன் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக பேனர் வைக்க ஆதரவாளர்களுடன் வந்துள்ளார் . பின்னர் கிஷோர் (வயது 26) என்பவரது வீட்டின் முன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கிஷோர் இங்கெல்லாம் பேனர் வைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் புருஷோத்தமனும், அவரது ஆதரவாளர்களும் கிஷோரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். தடுக்க வந்த கிஷோரின் நண்பருக்கும் அடி விழுந்துள்ளது. படுகாயமடைந்த கிஷோர் மற்றும் விக்னேஷ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
வீடியோவின் அடிப்படையில் திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த சம்பத்துக்கு கண்டனம் தெரிவித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை, குண்டர்கள் என்பது திமுகவின் அரசியல் கலாச்சாரம் . குண்டர்கள் மற்றும் வன்முறையில் செழித்து வளரும் உங்கள் கட்சி, மன்னிப்புக் கேட்டுவிட்டு ஒளிந்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்