திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் வழக்கில் சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
சீமான் விடுவிப்பு
கடந்த 19.05.2018 ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பல கட்டங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி மோதல் தொடர்பான வழக்கில் ஆஜரான நிலையில் சீமான் விடுவிக்கப்பட்டார். இரு தரப்பு கட்சினரும் சமரசம் செய்துகொண்டதால் வழக்கை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முடித்து வைத்தார்.

