ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கோயம்பேடு நெற்குன்றம் பகுதியில் சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகன திருட்டு
கோயம்பேடு அருகில் உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். 24 வயதான இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வேலையை முடித்து வீடு திரும்பினார். அப்போது தனது இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜாபரின் இருசக்கர வாகனத்தை சாதாரணமாக வாகனத்தின் லாக்கை உடைத்து பின்னர் அங்கிருந்து வாகனத்தை எடுத்து செல்கிறார்கள்.
அதே பகுதியில் மட்டுமே இதுவரை நான்கு இருசக்கர வாகனங்கள் திருடு போயிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான சிசிடிவி காட்சிகள் இருந்தும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திக்குமுக்காடி வருகிறார்கள்.

